2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் 11 பேர் காயம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா வில்வெளி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 4 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

கந்தளாய் 4 ஆம் வாய்க்கால் பகுதிக்கு திருமண வைபவமொன்றிற்காக வானொன்றில் பயணித்தக் குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

வான் கட்டுப்பாட்டை இழந்து வேலியொன்றில் மோதியபின் சரிந்து விழுந்ததாக காயமடைந்த பயணியொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X