2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமரசிங்க ஐநா பிரதிநிதியை பார்த்து இலங்கையின் விசனத்தை தெரிவிப்பு

Super User   / 2010 பெப்ரவரி 10 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசு ஐநச சபையின் இலங்கை மீதான பிலிப் அல்ஸ்டன் அறிக்கை பற்றி  தனது விசனத்தை நவநீதன் பிள்ளையிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

ஐயக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான தூதுவர்  நவநீதன் பிள்ளை அவர்களிடம் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க்ஹ ஐநாவின் நீதிக்குப்புறம்பான கொலைகள்,  குழுக்களை கொல்லுதல் மற்றும் தீர விசாரிக்காமல் கொல்லுதல் தொடர்பான  விஷேட தூதுவர்  பிலிப் அல்ஸ்டன் அவர்களின் அறிக்கை பற்றி கருத்து தெரிவிக்கும் பொது இலங்கையின் நிலைபாடை எடுத்து கூறினார் என்று அறியவருகிறோம்.

சென்ற மாதம் அல்ஸ்டன் அவர்கள் சேனல் நான்கு TV ஒளிபரப்பிய முல்லை தீவு யுத்தத்தின்  கோரக்கொலை காட்சிகளின் மீதான அறிக்கையை ஒரு ஐநா குழு மூலமாக வெளியிட முயர்ச்சி  மேற்கொண்டார்.

இந்த முயற்சி  ஐநா  மனித உரிமைகளின் விஷேட வழிமுறைகளை மீறும் செயலாகும் என்று இலங்கை ஜெனீவாவில்  விசனம் வெளியிடுள்ளது. .  (JN)
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .