2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இந்தியா - பாகிஸ்தான் தடுமாற்றம் தொடர்கிறது

Editorial   / 2017 மே 31 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவதில் காணப்படும் சிக்கல் நிலை, தொடர்ந்தும் நீடிக்கிறது. இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில், டுபாயில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று நடந்த போதிலும், இவ்விடயத்தில் முடிவு காணப்படவில்லை.

இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் மோசமான உறவுகளுக்கு மத்தியில், கிரிக்கெட் சாத்தியப்படாது என, இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு காணப்படும் நிலையிலும், இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

தற்போது, இதிலும் முடிவேதும் பெறப்பட்டிருக்காத நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் நடைமுறைகளுக்கு ஏற்பட, அச்சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் பிரசன்னத்தில், இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் சந்தித்துக் கலந்துரையாட வேண்டியேற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X