2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெங்கர் தொடர்பான அறிவிப்பு இன்று

Editorial   / 2017 மே 31 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் முகாமையாளரான ஆர்சீன் வெங்கர், ஆர்சனலின் எதிர்காலம் தொடர்பான உத்தியோகபூர்வமாக அறிவிப்பை, இன்று (31) வெளியிட,  ஆர்சனல் தீர்மானித்துள்ளது. 

ஆர்சனல் கழகத்தின் உரிமையாளர் டான் குரோங்கியை, நேற்று முன்தினம் (29) வெங்கர் சந்தித்திருந்தார். இச்சந்திப்பில், ஆர்சனலின் முகாமையாளராக வெங்கர் இரண்டு ஆண்டுகளுக்கு தொடருவார் என்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவு, நேற்று (30) இடம்பெற்ற பணிப்பாளர் சபை சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டே, உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று விடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .