2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வியட்நாம் செல்லும் கரப்பந்தாட்ட அணியில் யாழ். வீராங்கனை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

இலங்கை கனிஷ்ட பெண்கள் கரப்பந்தாட்ட அணி இன்ற 15ஆவது ஆசிய பெண்கள் கரப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வியட்நாமிற்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த அணியில் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் 19 வயதுப் பிரிவு மாணவியான பாலச்சந்திரன் புகழரசி என்ற மாணவியும் இடம்பெற்றுள்ளார்.

இந்த அணியில் இடம்பெற்ற முதலாவது தமிழ் வீராங்கனையாக புகழரசி காணப்படுகின்றார் .கடந்த காலத்தில் குறிப்பாக 15 வயதுப் பிரிவில் கல்லூரி அணியில் இடம்பெற்ற இவரும் இவருடைய சகோதரியும்  தேசிய அணிக்கான முகாமில் இடம்பெற்ற போதிலும் இறுதித் தெரிவில் புகழரசி மட்டும் தெரிவு செய்யப்பட்டு இன்று இரவு வியட்நாமுக்கு பயணத்தை மேற்க்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .