2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட செளத்கேட்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முகாமையாளராக எதிர்வரும் 2024ஆம் ஆண்டு டிசெம்பர் வரை தொடரும் புதிய ஒப்பந்தமொன்றில் கரெத் செளத்கேட் கைச்சாத்திட்டுள்ளார்.

முன்னைய செளத்கேட்டின் ஒப்பந்தமானது அடுத்தாண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன உலகக் கிண்ணத் தொடருடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூலம் இங்கிலாந்தின் முகாமையாளராக செளத்கேட் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது 68 போட்டிகளில், 44 போட்டிகளில் செளத்கேட் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .