2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன் ஸ்வியாடெக்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 10 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, நடப்புச் சம்பியனான இகா ஸ்வியாடெக் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் மரியா சக்கரியை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக், 4-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் கொகோ கெளஃப்பை எதிர்கொண்ட செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா, 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில்,  உலகின் 10ஆம் நிலை வீரரான, ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்மன்னை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம் நிலை வீரருமான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில், உலகிம் ஒன்பதாம் நிலை வீரரான இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-2, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .