2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மின்னல் தாக்கியதில் 17 பசு மாடுகள் பலி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 26 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குழுவினமடு கிராமத்தில் இன்று சனிக்கிழமை  அதிகாலை வேளையில் மின்னல் தாக்கியதில் 17 பசு மாடுகள் உயிரிழந்துள்ளன.

3 பண்ணையாளர்களின் பசு மாடுகளே மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளதுடன்,  மின்னல் தாக்கத்தில் உயிரிழந்த பசு மாடுகளின் பெறுமதி மூன்றரை இலட்சம் ஆகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

மரத்தின் கீழ் நின்ற பசு  மாடுகளே மேற்படி மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளன.  இருப்பினும் மரத்தின் கீழ் நின்ற  4 பசுக் கன்றுகள் மாத்திரம் உயிர் தப்பியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .