2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாகன விபத்தில் 2 கர்ப்பிணிகள் உட்பட 8 பேர் காயம்

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.வதனகுமார்)

வாகரை, மாங்கேணி கஜுவத்தைப் பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதால் 2 கர்ப்பிணிகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த வான், வீதிப் புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோதியது.  காயமடைந்தவர்கள் மொனறாகலை, புத்தள பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த 8 பேரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .