2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சட்ட விரோத மின் பாவனையில் ஈடுப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தரன்)

வாழைச்சேனை மின்சார சபை அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின் பாவனையில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

பேத்தாலை, விநாயகப்புரம, புதுக்குடியிருப்பு போன்ற கிராமசசேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவாறு சட்ட விரோத மின்பாவனையில் ஈடுப்பட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். ம்

இன்று அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கும் அதேவேளை அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட மின் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மாலை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X