2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி பலியானோருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் யானைகளின் தாக்குதலினால் கொல்லப்பட்டோருக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் திருமணமானோருக்கு ஒரு இலட்சம் ரூபாவும் திருமணமாகாதவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டு வருவதாக வெள்ளாவெளி உதவி பிரதேச செயலாளர் எஸ்.வரதராஜன் தெரிவித்தார்.

இதேவேளை மரணச் செலவிற்காக உடனடியாக ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 2008ஆம் ஆண்டு மீளக்குடியேறிய பின்னர் 10 பேர் யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .