2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அனுமதிபத்திரமில்லாத 5,000 துவிச்சக்கரவண்டிகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

அனுமதிபத்திரம் இல்லாது பயன்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபட்டுவந்த 5,000 துவிச்சக்கரவண்டிகள் மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு அனுமதி பத்திர இலக்க தகடுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்கப்பு மாநகரமேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர சபை அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார்.

கடந்த இருநாட்களில் 1,200 துவிச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி இலக்க தகடுகள் வழங்கியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.  இந்நடவடிக்கு  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸார் உதவி வழங்கி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • tharshan Thursday, 09 September 2010 11:36 PM

    இது எல்லாம் ஒரு செய்தி என்று போடுவதா மட்டக்களப்பில் எவளவு செய்திகள் இருக்கு ....சில செய்திகள் சரியான பிழையாகவும் இருக்கு .......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X