Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: வல்லிபுரம் பீதாம்பரம்
மீசாலை மேற்கு, வயற்கரையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பீதாம்பரம் கடந்த (28.08.2010) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - கதிராசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ் சென்ற செல்வி இராசம்மா வல்லிபுரத்தின் (ஓய்வுபெற்ற ஆசிரியை, கிளிநொச்சி இந்துக் கல்லூரி) அன்புச் சகோதரனும் நகுலினி (ஆசிரியை, ஸ்ரான்லிக் கல்லூரி), கோபிதாஸ், தயாளதாஸ், கமலதாஸ், ரமணதாஸ், சேகரன், லலிதாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும் பத்மநாதன் (கணக்காளர், பிரதேச செயலகம், நல்லூர்), மோகனா, குமுதினி, பிரதீபா, குகனேஸ்வரி, ஜெயக்குமார் (ஆசிரியர், கிளி - இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் மாமனும் சயந்தன், மேசிகன், ஜெனகா, வைசிகா, வைகீஸ், சகானா, சுருதிகா, சாருகா, தட்ஸா, ஹர்சனா, அபிஷன், லபோஷன், இந்துஜா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.08.2010 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக வேம்பிராய் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்.
தொ.பே: 0213209386
வயற்கரை,
மீசாலை மேற்கு,
மீசாலை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
1 hours ago