2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகங்கள் முடக்கம்

Niroshini   / 2016 மார்ச் 15 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் இணைய வழியாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்கள் வழங்கும் முறைமை செயலிழந்து போயுள்ளதாக அங்கு கடமையாற்றும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு என்பன இணைய வழியாக செய்யப்பட்டு, உடனடியாக மக்களுக்கு பிரதிகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த இரண்டு பிரதேச செயலகங்களிலும் இந்தச் சேவைகள் செயலிழந்துள்ளமையால், பழைய நிலையான, விண்ணப்ப படிவங்களை கடித உறை, முத்திரையுடன் பிரதேச செயலகத்திடம் வழங்கிவிட்டு வந்தால் மாத்திரமே பிரதிகள் உரியவர்களுக்கு தபாலில் அனுப்பும் முறை பின்பற்றப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இணைய வழியான முறையில் நாட்டில் எந்தவொரு பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களும், எதாவது ஒரு பிரதேச செயலகத்தில் இந்தச் சான்றிதழ்களைப் பெறக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .