2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அவசரமாக கொழும்பு திரும்பினார் எஸ்.பி.திஸநாயக்கா

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று வருகைதந்திருந்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா இன்று காலை கொழும்புக்கு திடீரெனப் பயணமானார்.

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதை அடுத்து ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இவர் கொழும்புக்கு பயணமாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று இடம்பெறும் பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகர் ஞாபகார்த்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவிருந்தார்.

இந்நிலையில் பரமேஸ்வராக் கல்லூரியை மீளவும் இயங்கவைக்கவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இளங்கோவனிடம் குறித்த கல்லூரியின் பழைய மாணவர்கள் விடுத்த கோரிக்கை உயர்கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இவர் நாளை கிளிநொச்சிக்குச் செல்லவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .