2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கண்நோயால் யாழ். வைத்தியசாலையில் அதிகளவானோர் சிகிச்சை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அதிகரித்த வெப்பநிலையால் ஏற்பட்டு வரும் கண்நோய்  காரணமாக யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலையில் நாளொன்றிற்கு 9 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் திருமதி. பவானி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக யாழ்ப்பாணத்தில் அதிகளவான வெப்பம் காணப்படுகிறது.  இதனால் கண்களைத் தாக்கும் நோய்களும் அதிகரித்து காணப்படுகிறன.

அத்துடன், அதிகரித்த வெப்பத் தாக்கத்தின் கதிர் வீச்சுக்களினால் சிறுவர்களின் கண்கள் பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், சிறுவர்களை பெற்றோர்கள் வெளியில் அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறும் அல்லது கருமை நிறத்திலான குளிர்மையான கண்ணாடிகளைப் பாவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X