2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடகடலில் மீண்டும் இந்திய மீனவர்கள் ஊடுருவியதாக புகார்

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய ஊடுருவல் இன்று சனிக்கிழமை காலை அதிகரித்து காணப்பட்டதாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் பலர் 250 இற்கு மேற்பட்ட அதிவிசைப் படகுகளில் வந்து வடமராட்சி மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்புக்களில் மீன்பிடியில் ஈடுபட்டதினை தாங்கள் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய ஊடுருவல் காரணமாக தாங்கள் தொழில் செய்யமுடியாது கரை திரும்பியதாகவும் இவ்வாறு இந்திய மீனவர்கள் அடிக்கடி வட கடலுக்குள் நுழைவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள மீனவர்கள், தொடர்ந்து இந்திய மீனவர்கள்  வட கடலுக்குள் நுழைவார்களானால் அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய ஊடுருவல் தொடர்பாக தங்கள் வடமராட்சி கடற்படையினரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .