2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடக்கில் பண்ணைகளை மீள்நிர்மாணிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி பண்ணை மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குளம் பண்ணையும் கமத்தொழில் அமைச்சின் கீழ் மிக விரைவில் மீள்நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்றும் இதன் முதற்கட்ட பணிகளுக்காக தலா 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தழிழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கு அவர்களின் தேவைகளை முதலில் இனங்கண்டு கொள்ள வேண்டும். பின்னர் அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்ந்து செயற்படுத்த வேண்டுமெனவும் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X