2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்,மும்தாஜ்,அப்துல்லாஹ்,ஏ.எஸ்.எப்.ஜெஸீரா ,வீரசொக்கன்)

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு  சிலாபம் சிட்டி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை பத்திரிகை பேரவையினால் நடத்தப்பட்ட இச்செயலமர்வினை புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்தது. இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா கலந்துகொண்டார்.

பிரதேச ஊடகவியலாளர்களின் ஒழுக்கம், அவர்களின் கடமைகளும் பொறுப்புக்களும் தொடர்பாக சிரேஷ்ட ஊடகவியலார்களினால் விரிவுரைகள் நடத்தப்பட்டன. அத்துடன், இலங்கை பத்திரிகை பேரவையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.

இதில் 60க்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X