2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வன பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்து துப்பரவு செய்த இருவருக்கு அபராதம்

Super User   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

மிஹிந்தலை அரச வன பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்து 0.8 ஹெக்டயர் காட்டினை துப்பரவு செய்த இருவருக்கு அநுராதபுரம் பிரதான நீதவானும்  மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன 40,000 ரூபா அபராதம் விதித்தார்.

கன்னட்டிய அஸோக்கபுர பகுதியைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு நேற்று புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் காட்டினை துப்பரவு செய்வதற்காகப் பயன்படுத்திய இரண்டு மண்வெட்டிகளையும் அரச உடைமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Monday, 10 December 2012 08:02 PM

    அரசாங்கத்திடம் மண்வெட்டி இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .