2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்கு முதலீட்டு விடயங்கள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2017 ஜூன் 05 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்குச் சந்தையொன்றில் ஈடுபாட்டுடன் பங்குகொள்ள விரும்பும் பங்காளர்கள் அடிப்படையாகச் சில விடயங்களைத் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகும். எவ்வாறு இலாபம் உழைக்கும் நோக்கமும் ஊக்கமும் உள்ளதோ, அதுபோன்றே அபாயநேர்வுகளைச் சந்திக்கக்கூடிய மனத்திறனையும் கொண்டிருத்தல் அவசியமாகும். அபாயநேர்வுகள் காரணமாக நட்டத்தைச் சந்திக்கின்றபோது, விரக்தியடைந்து பங்குச்சந்தையை விட்டு வெளிேயற எண்ணுவ​ைத விட, அத்தகைய நட்டங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எவ்வாறு பங்குச்சந்தையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதனைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பங்குச் சந்தை தொடர்பிலும், அதன் அடிப்படை செயல்பாடுகள் என்ன ? என்பதனை அறிவது அவசியமாகிறது. 

பங்கு முதலீடுகள் தொடர்பிலான விடயதானங்கள் 

பங்குச் சந்தையொன்றில் முதலீடுச் செய்வதாக நீங்கள் தீர்மானம் எடுத்தபின்பு, அத்தீர்மானம் தொடர்பிலும், சந்தை தொடர்பிலும் கற்றுக்கொள்ளுவது அவசியமே! பெரும்பாலும், பங்குச் சந்தையை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்? என்பதனைப் பொறுத்தே உங்களது நலன்கள் பங்குச்சந்தையில் தீர்மானிக்கப்படுகின்றன. 

பங்குசந்தையில் எப்போதுமே குறுகியகாலத்துக்குள் நலன்களை ஈட்டிக்கொள்ளுவது என்பது அசாதாரணமானது. அதுபோல, நீண்டகால செயல்பாடுகளின் பின்பு அதிக நலனை அல்லது இலாபத்தைப் பெற்றுக்கொள்ளுவது என்பதும் சாதாரணமான ஒன்றே! எனவே, எவ்வளவு காலம் நீங்கள் பங்குச் சந்தையின் அசைவுகளை (Movements) கண்காணித்து இருக்கிறீர்கள் என்பதே முக்கியமொழிய, எப்போது சந்தையில் பிரவேசிப்பது என்பதல்ல. ஆனால், சந்தை அசைவுகளில் தேர்ச்சி பெற்றபின்பு, குறுகியகால முதலீடுகள் மூலமாக நலனைப் பெற முயற்சி செய்யும்போது எப்போது பங்குகளை கொள்வனவு செய்வது, விற்பனை செய்வது என்பதில் காலமானது முக்கியத்துவம் பெறுகிறது. 

எந்தப் பங்குகளை வாங்குவது என தீர்மானித்தல் 

எந்தப் பங்குகளை வாங்குவது என்கிற தீர்மானமானது உங்கள் ஒவ்வொருவரினதும் முதலீட்டுக் குறிக்கோளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும். அதுபோல, நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளுகின்ற பங்குகளும் குறுகிய மற்றும் நீண்டகால நலனைத் தருமா ? என்பதனை கவனித்தல் வேண்டும். 

நீண்டகால முதலீட்டுத் திட்டத்ைத அடிப்படையாகக் கொண்டு, முதலீடுகளை மேற்கொள்ளும்போது, காலாகாலம் நீங்கள் முதலீடு செய்த ஆரம்ப முதலை, விரைவாக வளர்ச்சியடையச் செய்வதற்கான சந்தர்ப்பத்​துக்கான வழங்கக்கூடிய பங்குவர்த்தகத்துக்கான வாய்ப்புகள் எழலாம். அதுபோல, குறுங்கால முதலீட்டுப் பங்குப் பரிவர்த்தனையின்போது, அதனுடன் இணைந்த நட்ட அச்சங்கள் தொடர்பிலும் அவதானமாக இருத்தல் வேண்டும். இதன்போது, நீங்கள் முதலீடு செய்யும் பங்கின் வகையானது பல்வகை காரணிகளின் அடிப்படையில் பின்வருமாறு வேறுபடும். 

வருமானப் பங்குகள்:  இவ்வகைப் பங்குகள் முதலீட்டாளர்க்கு ஒரு தொடர்ச்சியான வருமான பாய்ச்சலை வழங்கும் பங்குகளாகும். ஏனைய பங்குகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, பங்கிலாபத்தில் அறவிடப்படும் வரிகள் மற்றும் பங்குக்கான செலவு, அதன் தேறிய பங்கிலாபம் ஒப்பிடப்படுதல் கவனிக்கப்படவேண்டிய விடயங்களாகும். 

பெறுமதிப் பங்குகள்:  பெறுமதிப் பங்குகள் பெரும்பாலும் குறைவான விலையையும் உயர்ந்த பங்கிலாப விளைவுகளையும் கொண்டிருக்கும். நீண்டகால முதலீட்டாளர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இத்தகைய பங்குகளை அதன் மெய்யான பெறுமதிப் பங்கிலாபங்கள் அல்லது பங்குகளின் விலைகள்அதிகரிக்கும் வரை வைத்திருப்பார்கள். 

வளர்ச்சிப் பங்குகள்: பங்குச்சந்தையில் திடமான வளர்ச்சிப் போக்​ைகக் கொண்டுள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் பங்குகளாகும். இத்தகையப் பங்குகள் குறைவான பங்கிலாபத்தைச் செலுத்தக்கூடும் அல்லது எவ்வித பங்கிலாபத்தையும் வழங்காமலும் போகலாம். பெரும்பாலும் வளர்ச்சிப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் எதிர்கால இலாபத்துக்காக அல்லது பங்குகளின் விலைகள் அதிகரிப்பதன் மூலமாகப் பெறக்கூடிய நிகர பங்கிலாபத்தைப் பெறுவதற்காக வைத்திருப்பார்கள். 

சுழற்சித்தன்மையுடைய பங்குகள்:  பெரும்பாலும் சந்தையின்போக்குக்கு நெருங்கிய தொடர்பைக் கொண்ட பங்குகளாக இது இருக்கும். எனவே, இவற்றின் சந்தை பெறுமதி, இலாபத்தன்மை என்பவை இதுதானா என நிச்சயமாகக் கூறமுடியாதவொன்றாக இருக்கும். 

தற்காப்பான பங்குகள்: எவ்விதமான புறக்காரணிகள் அல்லது பொருளாதார மாற்றங்களும் பாதிக்காத பங்குகள் இவையாகும். இவ்வகைப் பங்குகள் எவ்வகைப் பொருளாதார இடநேர்வுகளின்போதும் திடமான தன்மையைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளாக இருக்கும். 

பங்குத் தெரிவில் கவனிக்க வேண்டியவை 

பங்குகளைத் தெரிவுசெய்யும்போதும், பங்குப் பரிவர்த்தனையில் ஈடுபடும்போதும் ஒவ்வொரு முதலீட்டாளர்க்கும் இரண்டு வகையான தெரிவுகள் உள்ளன. ஒன்று பங்குத்தரகர்களின் வழிகாட்டலுடன் தமக்குத் தேவையான மேற்கூறிய பங்குகளை இனம்கண்டு அவற்றில் முதலிடக்கூடியதாக இருக்கும். அடுத்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை இணையத்தளத்தில் உள்ள வழிகாட்டல்களுடன் தனக்குத் தேவையான பங்குகளை இனம் கண்டு முதலீடு செய்யக் கூடியதாக இருக்கும். 

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. பொருளாதார மற்றும் புறக்காரணிகளுக்கு அமைவாக எந்தத்துறையில் முதலீட்​ைட செய்யவேண்டும் என்ப​ைத அறிந்துகொண்டு அந்தத் துறையில் உள்ள நிறுவனங்களை இனம்காண முடியும். அதேபோன்று, மேற்கூறிய காரணிகளைக் கொண்டு, நிறுவனப் பங்குகளை ஆய்வு செய்யும்போது, ஊகப்பண்புடைய பங்குகள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும். 

ஊகப்பண்புடைய பங்குகள்: சந்தை ஆய்வின்போது கவர்ச்சிகரமான தகவல்களையும், விரைவில் வளர்ச்சியையும் காட்டும் நிதி, ஸ்திரத்தன்மையற்ற நிறுவனங்களின் பங்குகளே இவையாகும். இத்தகைய நிறுவனங்கள் தமது வளர்ச்சி தொடர்பில் விளம்பரப்படுத்தும்போது அதற்கான அடிப்படை ஆதாரங்களை அளிக்காதுவிடின், அவை நட்ட அச்சத்தன்மை கொண்ட ஊகப்பண்புடைய பங்குகள் ஆகும். இவை தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும். 

முதலீட்டு முறை  சாதாரணமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்ப​ைத அறிந்திருக்க வேண்டும்.ஒட்டுமொத்த முதலீட்டு நிதியில் 60% பங்குகளிலும் 30%த்​ைத முறிகளிலும் (அபாயநேர்வு குறைவான அரச பங்குகள் என குறிப்பிடலாம்), 10%த்ைதப்பணமாகவும் கொண்டிருத்தல் பரிந்துரைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் 80% பங்குகளை கொண்டிருப்பின், அது முதலீட்டின் உயர்நிலையாகக் கொள்ளப்படும். இந்த நிலையில், முதலீட்டாளர் இலாபத்தையோ அல்லது நட்டத்​ைதயோ அடையக்கூடிய உயர்நிலையைக் கொண்டிருப்பதாக இருக்கும். 

வரிவிதிப்பு முறை: பங்கிலிருந்து பெறப்படும் இலாபமானது வரிவிதிப்புக்கு பின்னதாகக் குறைவாகவிருப்பின், அதுதொடர்பில் தேர்ச்சி பெற்றவர்களுடன் கலந்தாலோசியுங்கள். இல்லையெனில், இத்தகைய பங்குகளை நீண்டகாலத்துக்கு கொண்டிருப்பதன் விளைவாக மேலதிக நன்மைகளைப் பெற முடியாது என்கிற பட்சத்தில் அ​ைத விற்பனை செய்யவும் முதலீட்டாளர்கள் தயங்கக் கூடாது. 

மீள் முதலீட்டு சந்தர்ப்பங்கள்  பங்குச் சந்தையில் முதலீடுச் செய்தபின்பு, வேறொரு நிறுவனத்தின் பங்குகள் வாய்ப்பானதாக அல்லது முதலீட்டுக்கு ஏற்புடையதாக கண்டிருக்கக்கூடும். இதன்போது, தன்னிச்சையாக உள்ள பங்குகளை விற்பனைசெய்து அைதப் புதிய பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்னதாக, எதிர்கால முதலீட்டு உபாயங்களுக்கும், தற்போது செய்துள்ள எஞ்சிய முதலீடுகளுக்கும் நன்மை பயப்பதாக உள்ளதா ? என்பதை ஆய்வு செய்தே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். 

பங்குத்தரகர் ஏன் அவசியம் ? 

கொழும்பு பங்குச் சந்தையில் ஒரு பாதுகாப்பான மற்றும் முறையான பங்குப் பரிவர்த்தனை​ையச் செய்வதற்கும், முதலீட்டாளர்களை நேரடியாகவன்றி தரகர்கள் ஊடாகப் பங்கு பரிவர்த்தனை கண்காணிப்பகங்கள் முறைமைபடுத்துவதாலும், ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் பங்குத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள். இதன்போது, பங்குத்தரகர்கள் ஆலோசனைகளை வழங்குவதுடன், பங்குப் பரிவர்த்தனையில் சேவைக்கட்டணத்தை அடிப்படையாகக்கொண்டு கொள்வனவு மற்றும் விற்பனைக் கொடுக்கல் வாங்கல்களை முதலீட்டாளர்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள். 

நடைமுறையில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது சுமார் 31 உரித்துவமளிக்கப்பட்ட பங்குத்தாரர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் ஒருவரை உங்கள் முகவராக அல்லது ஆலோசகராகக் கொண்டு பங்குச்சந்தையில் முதலீட்டாளராக உள்நுழைய முடியும். 

பங்குகளை எப்போதெல்லாம் கொள்வனவு செய்ய முடியும் ? 

சாதரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை முதலாந்தரச் சந்தையில் அல்லது இரண்டாம்தரச் சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும். முதலாம் தரச் சந்தை என்பது, புதியபங்கு வழங்கலின் ஊடாக மூலதனத்​ைதத் திரட்டிக்கொள்ள உரித்துடமை கொண்ட நிறுவனங்களால் முதன்முறையாகப் பொது மக்களுக்குப் பொது வழங்கலைச் செய்யும் சந்தையாகும். அதுபோல, இரண்டாம் தரப் பங்குச் சந்தை எனப்படுவது, ஏற்கெனவே முதலாம்தரச் சந்தையின் ஊடாக பங்குதாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்ட பங்குகள் மீளவும் மூலதன ஆதாயங்களுக்காகவும் ஏனைய நலன்களுக்காவும் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற சந்தை இதுவாகும். 

மேற்கூறிய அனைத்துமே, பங்குச்சந்தையொன்றில் புதிதாக பங்குகொள்ள விரும்புகின்ற எந்தவொரு முதலீட்டாளருமே அறிந்திருக்க வேண்டிய அடிப்படையான விடயதானங்கள் ஆகும். இவற்றுக்குப் பின்னதாக, பங்குச்சந்தையொன்றில் பரிவர்த்தனையைச் செய்வது எப்படி ? அதற்காக ஆரம்பிக்க வேண்டிய கணக்குகள் அமற்றும் சமர்பிக்கவேண்டிய ஆவணங்கள் எவை ? பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது கவனிக்கவேண்டியவை என்ன ? என்பது தொடர்பில் அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .