2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிளிநொச்சியில் வரி அறவீடு விசேட கருத்தரங்கு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சி வர்த்தகர் சங்கம், வரி செலுத்துவோர் மற்றும் வரி ஆலோசகர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகத்தினால் வரிசெலுத்துநர் சேவைப்பிரிவின் அனுசரனையுடன் நாளைமறுதினம் ஞயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கிளிநெச்சி மாவட்ட செயலகத்தில் வரிவிதிப்பனவு தொடர்பான கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் கே. எஸ். கந்தேகெதரவின் தலைமையில் நடைபெறவுள்ளது. ஆகவே இக்கருத்தரங்கில் வர்த்தகர்கள், கணக்காளர்கள் மற்றும் வரிவிடையத்தில் ஆர்வமுடையவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சுப்வாஜி கேட்டுள்ளார்.

இக்கருத்தரங்கிற்கான அனுமதி இலவசம் என்பதுடன் இது தொடர்பான மேலதிகவிபரங்களுக்கு 021 ௨222076 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .