2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உறவினர், நண்பர்கள் வீடுகளில் வசித்து வரும் சாந்தபுரம் மக்களுக்கு காணி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாந்தபுரத்தில் மீள்குடியேறிய நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வந்த சாந்தபுரம் கிராம மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் ஏற்பாட்டில்; கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சிப் பிரதேச காணி அலுவலர் சிவகுமார், கிராம அலுவலர் திருமதி சுப்பிரமணியம், பிரதேச இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் குமாரசிறி, ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை குறித்த கிராமத்திற்கு சென்று மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததுடன், 18 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .