2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கணவன் - மனைவி தகராறில் மாமியார் பலி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்)

கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தடுக்கச் சென்ற மாமியார் கத்திக் குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

பூநகரியிலுள்ள  பள்ளிக்குடாப் பகுதியிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

40 வயதான மாமியாரே இந்த சம்பவத்தில் பலியானவர் ஆவர்.

நிறைமாதக் கர்ப்பிணியான மனைவி மீது கத்தியால் குத்துவதற்கு கணவன் முற்பட்ட வேளையில், அதனை தடுப்பதற்காகச் சென்ற மாமியார் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .