2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுத் சங்கத்தின் கிளை காரியாலயம் திறப்பு விழா

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுத் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளை தலைமை காரியாலய திறப்பு விழா இன்று காலை  பட்டாணிச்சி புளியங்குளத்தில் நடைபெற்றது.

பனை தென்னை வள அபிவிருத்தி சங்க வவுனியா கிளைத் தலைவர் அன்ரனிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துக் கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில்,   பனை அபிவிருத்தி சங்க தலைவர் பி. சீவரத்தினம்,  மாவட்ட மேலதிக அரச அதிபர் என். திருஞானசம்பந்தர்,  பிரதேச செயலாளர் ஏ.சிவபாதசுந்தரன்,  வடமாகாண மதுவரி உதவி ஆணையாளர் கிறிஸ்ரி யோசப்,  உள்ளிட பலர் கலந்துக் கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X