2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கள்ளு தவறணையில் காவலாளியின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஜனவரி 31 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் கீழுள்ள கள்ளு தவறணையில் இருந்து, இன்று (31) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியை சேர்ந்த சின்னராசா ஜெகன் (வயது - 39) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர், கள்ளு தவறணையில் காவலாளியாக கடமையாற்றி வருபவரென, சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.

குறித்த நபர், வழமை போன்று, (30) இரவு, காவல் கடமைக்காக சென்ற நிலையிலேயே, சடலமாக மீடகப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .