2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியிலும் போராட்டம்

Niroshini   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பினால்,  சுதந்திர  தினத்தை கரி நாளாகப் பிரகடனப்படுத்தி, கிளிநொச்சியில், இன்று (04), மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
கிளிநொச்சி  பழைய வைத்தியசாலைக்கு முன்னால், இன்று காலை 10 30 மணிக்கு ஒன்றுதிரண்ட உறவுகள்  போராட்டத்தை முன்னெடுத்தனர்.
 
பின்னர், அங்கிருந்து பேரணியாக  பழைய  கச்சேரி வரை சென்று, அங்கு ஐ.நாவுக்கான மகஜர் வாசிக்கப்பட்டது.
 
இந்தப் போராட்டத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். மாநகர சபை மேயர்   வி.மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .