2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கேப்பாபுலவில் 179 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 18 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேப்பாபுலவில், 179 ஏக்கர் காணி, நாளை (19) விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தையடுத்து இவ்வாண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி 54 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இவ்வாண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே கேப்பாபுலவுவில் 179 ஏக்கர் காணி, நாளை (19) விடுவிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .