2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேஸ்புக்கில் அவதூறு; பொலிஸில் முறைப்பாடு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை போலி பேஸ்புக் பக்கம் ஊடாக அவதூறான பரப்புரையை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், விசுவமடு பகுதியில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ், கிராம சேவையாளரை மாற்றவேண்டாம் எனக் கூறிய பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளை பற்றி போலி பேஸ்புக்கில் அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக, அதன் ஆவணங்களுடன் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .