2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கல்லடியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி  கடற்கரையோரத்தில் 65 வயதுடைய ஆணொருவரின் சடலம் இன்று காலை 7.45 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்தன தெரிவித்தார்.

கல்லடி திருச்செந்தூர் என்ற விலாசத்தைச்சேர்ந்த மைக்கல் ஞானபிரகாசம் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி பெற்றிக் பெர்னாண்டோ, பிரேத பரிசோதணையினை நடத்தி சடலத்தை உறவினர்களிடம் கையளித்தார். காத்தான்குடி பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .