2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சனி, ஞாயிறுகளில் படகுப் போக்குவரத்து இடைநிறுத்தம்: பிரயாணிகள் சிரமம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - குருமண்வெளிக்கிடையிலான இயந்திரப் படகுகள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மாலை 5 மணிக்குப் பின்னர் போக்குவரத்தில் ஈடுபடாதுள்ளதால்  பிரயாணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

மண்டூர் பகுதியிலிருந்து இப்பாதையூடாக களுவாஞ்சிக்குடிக்கு பகுதிநேர வகுப்புகளுக்காகச் செல்லும் மாணவர்கள் முதல் அனைவரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிக தூரமான பட்டிருப்பு வீதியூடாகவே பயணிக்கவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .