Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 26 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த்
மக்களுக்கு கடமையாற்றும் போது, மொழி ஒரு பிரச்சினையான விடயமல்லவென, வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துசேன தெரிவித்தார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளராக, இன்று(26), தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் வவுனியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றியிருந்தேன் எனவும் வவுனியாவை பொறுத்தவரை தமிழ், சிங்கள இனங்களைச் சேர்ந்த அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய மக்கள் வசித்து வருகின்றார்கள் எனவும் கூறினார்.
எனவே, தான் ஒரு பெரும்பான்மை இனத்தவராக இருந்தாலும், தமிழ்ப் பிரதேசத்தில் கடமையாற்றுவதில் எந்தவித இடையூறும் இருக்காது என கருதுவதாகவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
6 hours ago
9 hours ago
9 hours ago