2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்த இளைஞன் கைது

Freelancer   / 2023 மார்ச் 10 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

தீவகப் பகுதியில் நீர் விநியோகம் செய்யும் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்துடைத்து சொத்துக்கு சேதம் விளைவித்த நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வேலனை - ஏழாம் வட்டார பகுதியைச் சேர்ந்த நபரின் வாகனமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .