2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் மாணவி உட்பட இருவர் படுகாயம்

Niroshini   / 2021 நவம்பர் 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில், இன்று (23) காலை, இலக்கத் தகடு அற்ற பஸ் ஒன்று மோதியதில், பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியும் நபர் ஒருவருமே, படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .