2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சாவகச்சேரி பகுதியல் மின்வெட்டு

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

சாவகச்சேரி பகுதியில் கடந்த சில நாள்களாக நாளாந்தம் இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறையாத மின்வெட்டு இடம்பெறுவதால் அப்பகுதி மக்கள் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 நுணாவில் வடக்கு, மேற்கு, மத்தி, மட்டுவில் வடக்கு, தெற்கு, கல்வயல், சரசாலை ஆகிய கிராமங்கள் தொடர்ந்து மின்வெட்டினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களால் உரிய பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .