2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வலிவடக்கில் மீள்குடியோருக்கு அனுமதி கிடைத்தவுடன் நிவாரணம் வழங்கப்படும்: யாழ். அரச அதிபர்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். வலிவடக்கில் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு இவ்வருடத்திற்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து  கிடைக்கவில்லையென்றும்  அனுமதி கிடைத்தவுடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுமெனவும் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சுக்கு பக்ஸ் மூலமும் மின்னஞ்சல் மூலமும் மகஜரொன்று அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்களுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லையென்று வடமராட்சி வலிவடக்கில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் யாழ். அரசாங்க அதிபரிடம் இன்று முறையிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே மீள்குடியேற்ற அமைச்சுக்கு அவர் மகஜரொன்றை அனுப்பிவைத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X