2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூட்டுறவில் அரசியல் தலையீடுகள்: சுகிர்தன்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா
 
கூட்டுறவுச் சபையில் அரசியல் தலையீடுகள் அதிகமாகக் காணப்படுவதினால் கூட்டுறவின் வளர்ச்சி மந்தகதியில் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
 
கூட்டுறவு பெரியார் அமரர் வீரசிங்கத்தின் 49ஆவது நினைவு தினமும் 91ஆவது சர்வதேச கூட்டுறவு  தினவிழாவும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிமை (05) நடைபெற்றது.
 
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
யாழ்ப்பாண கூட்டுறவு சபையில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடும், வன்னியில் அமைச்சர் றிசாத் பதியுதினின் தலையீடும் காணப்படுகின்றது. யுத்தத்திற்கு முன்னர் இருந்த கூட்டுறவு வளர்ச்சியினைவிட அதற்கு பின்னர் இருந்த கூட்டுறவு வளர்ச்சி மிகவும் மந்த கதியாகவே காணப்பட்டது. இதற்கு உண்மையான காரணம் இக்கூட்டுறவு சபையில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமை ஆகும்.  
 
இனிவரும் காலங்களில் இந்த கூட்டுறவு சபையை கொண்டு நடத்துவதற்கேற்ற நடுவர், பணியாளர்கள் அவசியமெனவும் சிறந்தவர்கள் கூட்டுறவைச் செயற்படுத்தும் பட்சத்தில் இதுவரை காலமும் இழந்தவற்றிலிருந்து முன்னோக்கி செல்ல முடியுமெனவும் கூட்டுறவு சபையானது சரியான முறையில் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
 
அத்துடன் ஆரம்பகால கூட்டுறவு வளர்ச்சியை கூட்டுறவாளர்களே பொறுப்பேற்க வேண்டுமெனவும் கூட்டுறவில் வரும் இலாப நட்டங்களை கூட்டுறவாளர்களே பொறுப்பெடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .