2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

50 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 நவம்பர் 26 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

அளவுக்கு அதிகமான மதுபான போதல்களை எடுத்துச் சென்ற ஒருவர் (நேற்று) காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 50 மதுபான போதல்களை எடுத்துச் சென்றுள்ளார்.

பண்டத்தரிப்பு நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அளவெட்டி பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .