2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முதியோர் கொடுப்பனவு கையளிப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீட், எப்.முபாரக்

 

திருகோணமலை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் சீ.அருள் செல்வத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மூதூர் தபாலகத்தில் முதியோர் கொடுப்பனவுகளைப் பெறும் பயனாளிகளுக்கு, வீடு வீடாகச் சென்று, இன்று(29) கொடுப்பனவுகள் கையளிக்கப்பட்டன.

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் தபாலகத்தின் உதவித் தபால் அதிபர் எம்.எம்.ரிஷாட் மற்றும் காரியாலய உதவியாளர் ஆகியோர், பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, இந்த நிதியுதவியினை கையளித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X