2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடக்குக், கிழக்கில் சஜித்துக்கு அமோக வரவேற்பு

Nirosh   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக், கிழக்கு மாகாணங்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அமோக வரவேற்பிருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் சஜித் எனவும் தெரிவித்தார். 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி கிடைக்கும் எனவும், குருநாகல் மாநகரசபையின் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி கிடைத்தது. இதன்படி, அம்மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனோ, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ இணைந்துப் பயணிக்கபோவதில்லை எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .