2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரச ஊழியர்களின் சம்பளம் குறையாது

Editorial   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (24) அறிவித்துள்ளது.

அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  அமைச்சரவையின் இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதிக்கு நன்கொடையாக அளிக்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது அரசு துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X