2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஏழு மூளைகள் இருந்து என்ன பயன்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 16 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகைளைக் கொண்டிருக்கும் ஒருவர் இருப்பதாக பெருமை பேசிய அரசாங்கம், இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


கெஸ்பேவ நகரில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே,
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு வீடுகளிலும் வறுமை, பொருளாதார  சிக்கல்கள் அதிகரித்துவந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு
அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை என்றார்.

குண்டர்கள், நண்பர்கள், பாரிய மாபியாக்கள் இணைந்து நாட்டில் செயற்படுவதாகத்
தெரிவித்த அவர், ஆனால் நாளுக்கு நாள் அரசாங்கம் மக்களை சிரமத்துக்குள்ளாக்கி
வருகிறது என்றார்.

சிவில் உரிமைகள், பொருளாதார உரிமைகள், அரசியல் உரிமைகள், கலாசார உரிமைகள்
உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம்
காணப்பட்டாலும் இன்று நாட்டு மக்கள் அசௌகரியம் வறுமையால் அவதிப்படுகின்ற


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .