2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

12ஆம் திகதி மாத்திரம் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள்

Nirosh   / 2021 ஜூன் 14 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தும்  செயற்பாடுகளின்படி, இம்மாதம் 12ஆம் திகதி மாத்திரம், நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக கொழும்பு மாவட்ட தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் அதிகளவானோருக்கு கடந்த 12ஆம் திகதி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு, சீன தயாரிப்பான சினோஃபார்ம் முதல் டோஸ் 59 ஆயிரத்து 881 பேருக்கும், இரண்டாவது டோஸ் 76 ஆயிரத்து 615 பேருக்கும் இந்தத் தினத்தில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்று நோய் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரையில் சுமார் 23 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .