2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சுவிஸ் பெண் ஊடகவியலாளரின் விஸாவை இரத்துச்செய்ய அரசு உத்தரவு

Super User   / 2010 ஜனவரி 29 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ் நாட்டு பெண் பத்திரிகையாளரை எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் செய்தி சேகரிப்புக்காக இலங்கை வந்திருந்த மேற்படி பெண் பத்திரிகையாளரின் விஸாவை ரத்துச்செய்யுமாறு  அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தனக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட குடிவரவு க்கட்டுப்பாட்டாளர்  பி.பி.அபேய்கோன் தெரிவித்துள்ளார்.

இதே வேளை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு தனக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக சுவிஸ் வெகுசன வானொலியின் பெண்  ஊடகவியலாளர் கெரின் வெங்கர் கூறியதாக ஏ எப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X