2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சடலங்களைப் புதைக்க இடம் இல்லை’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்  ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் அடங்களாக, 1,437 பேர் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே 1,437 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 ”25 க்கு மேற்பட்ட உடல்கள் நாளாந்தம் வந்த வண்ணமிருக்கிறது. ஆகையால், இனிவரும் நாள்களில் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் கவலை தெரிவித்துள்ளார். 
 
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டுமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடலகங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன.  

இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு, இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர். 

இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செயவதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி  அதில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இந்துக்களின் 40 உடல்கள், கிறிஸ்தவர்களின் 28 உடல்கள், பௌத்தர்களின் 21 உடல்கள் உட்பட, ​ஓகஸ்ட் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 1,437 பேரில் உடல்கள் அடக்கம்
செய்யப்பட்டுள்ளன.

இதில் அடக்கம் செய்யபப்பட்ட இடங்களில் அடையாள கல்கள் நாட்டப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு அந்த இலக்கங்களின் உடல்கள்  யாருடையது என்ற பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு பிரதேச சபையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு
சில நாட்களில் இந்த இடம் முடிந்துவிடும்.

“எனவே, மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவே, உடனடியாக ஓரிடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .