2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூன்று எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது

Editorial   / 2021 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளில் மூன்று எம்.பிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒரேநாளில் இதுவரையிலும் மூன்று எம்.பிகளுக்கு தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான   ரோஹண திஸாநாயக்கவுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான திலிப் வெதஆராச்சிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X