2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சத்தம் போடாமல் சாதனை செய்’

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்ணுக்குள் சுழியோடி வளர்ந்து, இறுகி, தன் முதுகில் பெரு விருட்சத்தை நிலைநிறுத்துகின்றன வேர்கள். இந்த முயற்சி, தங்களால் முடியாது என எண்ண, வேர்களுக்கு நேரமும் இல்லை. எங்கெல்லாம் நீர், பசளை உள்ளதோ, அங்கெல்லாம் தேடி, தேட்டம் தேடும் மெல்லிய சிறுவேர், பக்கவேர், ஆணிவேர் என, தாய்மை உணர்வுடன் மரத்தைத் தாங்குகின்றன.  

ஆனால் மனிதன், தனக்காகவும் தன் மனைவி, பிள்ளைகள், சொந்தம், பந்தம், உலகுக்காகவும் உண்மையான பொறுப்புணர்வுடன் தாங்கி நிற்கின்றானா? 

சுமைகளைத் தாங்க முடியாமல் ஓடும் தந்தை; பெற்றோரை மட்டுமல்ல, தம்பி​மாரை, அக்காமாரை உடன்பிறப்புகளை விட்டோடும் பிள்ளைகள் என்று பொறுப்பற்ற சம்பவங்கள், இன்று ஏராளம், ஏராளம். பொறுப்புடன் கடமைகளை ஏற்பதும் உளமார்ந்த திருப்திதான்.  

உதவி கேட்டு, உங்களை யாராவது நாடினால், உங்களுக்கு வலிமை உண்டு என நம்பித்தானே அவர்கள் வருகிறார்கள். எதுவுமே வெளியே தெரியாமல், தமது வாரிசை, வேர்கள் மௌனத்துடன் உருவாக்குகின்றன.  

சத்தம் போடாமல் சாதனை செய்; உத்தம மைந்தா, உலகைத் தூக்கி நிறுத்து. 

வாழ்வியல் தரிசனம் 05/09/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X