2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தயார்...

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரில் நீண்ட காலமாக மக்களின் பாவனைக்கு இல்லாமல் இருந்த வாவியை அண்டிய யாட் வீதிப் பிரதேசத்தை, நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பொழுது போக்கும் இடமாக மாற்றும் நிர்மாணப் பணிகள் முடிவுறும் நிலைக்கு வந்துள்ளன.

பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுச்சித்  திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபாய் செலவில், மக்களின் வேண்டுகோளுக்;கிணங்க அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ்சின் முன்மொழிவினால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

வாவிக்கரையை அண்டிய இப்பிரதேசத்தில் இருக்கைகளுடன் கூடிய 3 பொழுது போக்கு கூடாரங்களுடன் பச்சைப் புல் தரையுடன் கூடிய தோட்டங்களும்   நிர்மாணிக்கப்படவுள்ளதாக திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மாவட்ட செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டைப் பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் புராதன இடமாக உள்ளதனால் கச்சேரிப் பிரதேசத்துக்கு எதிரே செல்லும் யாட் வீதியை அண்டிய வாவிக்கரை பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .