2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

புத்தளம் பிரதேச செயலக மரதனோட்டம்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 24 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகர சபையின் ஒத்துழைப்புடன் புத்தளம் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மரதனோட்டப் போட்டியை புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

பிரதேச செயலாளருடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்ட ரபீக் தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்ததுடன், மரதனோட்டப் போட்டியையும் கொடியசைத்து உற்சாகத்துடன் ஆரம்பித்து வைத்தார்.

போட்டி நிறைவில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி வீரர் எப்.எம். சாஜித் முதலாமிடத்தை சுவீகரித்துக் கொண்டார்.

மேலும் ஸாஹிரா கல்லூரி வீரர்கள் முதல் 10 இடங்களில் முதலாமிடம் உட்பட ஐந்து இடங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

 டீ.ஈ.எம். அனஸ், ஏ.பீ.எம். இல்ஹாஸ், எம்.ஆர். அப்கர், ஏ. நபீல், எம்.எஸ்.எம். ஜாமி ஆகியோரே ஏனைய இடங்களை பெற்றுக்கொண்டவர்கள் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .