2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொட்டகலையில் பதுக்கப்பட்ட டீசல் கைப்பற்றப்பட்டது

R.Maheshwary   / 2022 ஜூன் 27 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசல், திம்புள்ள - பத்தனை பொலிஸாரால் நேற்று (26) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தக நிலையத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள - பத்தன  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட நடவடிக்கைக்காக அவர் இன்று (27) ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

" நாங்கள் மொத்த  வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது." என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .